×

என் கனவுதிட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது: ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: என் கனவு திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது “நான் முதல்வன்” திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். குடிமைப் பணித் தேர்வில் பீடித் தொழிலாளி மகள் இன்பா தேர்ச்சி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், பொருளாதார வசதி இல்லாததால் வீட்டில் இருந்தபடியே குடிமைப் பணித் தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளார். இரண்டு முறை தேர்வெழுதியும் தேர்ச்சி பெறவில்லை.

விடா முயற்சியுடன் மூன்றாவது முறையாக தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 851வது இடத்தைப் பெற்றுள்ளார்.  குடிமைப் பணித் தேர்வை மூன்றாவது முறையாக முயற்சித்த போது, அதற்கான பயிற்சியை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இன்பா பெற்று வந்தார். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை பெற்றார்.

இதையடுத்து, முதன்மைத் தேர்வை அவர் கவலையின்றி எதிர்கொண்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது “நான் முதல்வன்” திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவர்-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக வலைத்தளப் பதிவில், “என் கனவுத்திட்டமாக தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் நான் முதல்வன்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

The post என் கனவுதிட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது: ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Inba ,Tenkasi district ,M.K.Stal ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...